வழிபாட்டால் நிம்மதி காண வேண் டிய நாள், சொன்ன சொல்லைக் காப் பாற்ற துடிப்புடன் செயற்படுவீர்கள், சுப செலவுகள் அதிகரிக்கும், தொழிலில் புதிய மாற்றங்களைச் செய்யும் எண்ணம் உருவாகும்.
இடபம்
புதிய நண்பர்களின் அறிமுகத்தால் பொருளாதார நிலை உயரும், வீட்டு உபயோகப் பொருட்களை வாங்கி மகிழும் வாய்ப்புண்டு, தெய்வ அனுகூலமுண்டு.
மிதுனம்
கோயில் வழிபாட்டில் குதூகலம் காண வேண்டிய நாள், வரு மானம் வரும் வழியில் ஏற்பட்ட தகராறுகள் அகலும்.
கடகம்
ஆன்மீக நாட்டம் அதிகரிக்கும், மூத்தவர்களால் ஏற்பட்ட பிரச்சி னைக்கு முற்றுப்புள்ளி ஏற்படும், கொடுத்த வாக்கை காப்பாற்றும் எண்ணம் மேலோங்கும்.
சிங்கம்
விரயங்கள் தவிர்க்க இயலாமல் ஏற்படும்,வாகனங்களில் செல்லும் போது விழிப்புணர்ச்சி தேவை, காரிய வெற்றிக்கு கடவுளை வழிபட வேண்டிய நாள்.
கன்னி
பெண்களின் சுபகாரிய பேச்சுக்கள் முடிவாகும், நண்பர்கள் மூலம் உதவி கள் கிடைக்கும், பிரயாண அணுகூலம் உண்டு, புதிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள்.
துலாம்
வியாபார விருத்திக்கு வித்திடுவீர் கள்,மறைமுக எதிர்ப்புகள் விலகும், எதிர் பார்த்த தொகை கைக்கு வந்து சேரும், பழைய கடன்கள் வசூலா கும்.
விருச்சிகம்
பொதுவாழ்வில் புகழ் கூடும் நாள் தொழில் வளர்ச்சி கருதி எடுத்த முயற்சிகள் வெற்றியளிக்கும், புதிய திட்டங்கள் தீட்டுவீர்கள்.
தனுசு
உற்சாகமாகப் பணிபுரிவீர்கள், வாக னம் பற்றிய சிந்தனை உருவாகும், தொழில் வளர்ச் சிக்கு தடையாக இருந்தவர்கள் விலகுவர்.
மகரம்
நண்பர்கள் கலந்துரையாடல் ஆரோக் கியம் சீராகி ஆனந்தப்படும் நாள், சகோதர வழி ஒத்துழைப்பால் பாகப்பிரிவினைகள் சுமுகமாக முடி யும் தெய்வ தரிசனம் உண்டு.
கும்பம்
விரதங்களில் நம்பிக்கை கூடும் எதிர்பார்ப்புகள் எளிதில் நிறைவேறும் புதிய பொருள் சேர்க்கையுண்டு மனையில் மங்கள ஓசை கேட்பத ற்கான அறிகுறி தோன்றும் பணவரவு திருப்தி தரும்.
மீனம்
தெய்வ வழிபாட்டால் திருப்தி காண வேண்டிய நாள் ஆரோக்கியம் சீராக மருத்துவத்தை நாட வேண்டிய நாள் திடீர் பயணத்தால் திசைதிருப்பம் ஏற் படலாம்.
இன்றைய நாள்
03.09.2010
(ஆவணி 18 வெள்ளிக்கிழமை)
தசமி பின்னிரவு 3.37 மணி வரை
மிருகசீரிடம் முற்பகல் 9.53 மணி வரை
இராகுகாலம் 10.35-12.05 மணிவரை
சுபநேரம் 6.05-7.35 மணிவரை
சங்கு
ஒலி
இன்று:
11
தொலைபேசி 0094 21 222 7829 மின்னஞ்சல்-
editor@valampurii.com
Registered as News paper in Srilanka
259
புனர்வாழ்வு முகாமில் உள்ள புலிகளுக்கு சர்வதேச வலையமைப்புடன் தொடர்பு? - இராணுவப் பேச்சாளர் தெரிவிப்பு [செய்தி பதிவுசெய்யப்பட்டது : 2010-07-30 06:36:05| யாழ்ப்பாணம்]
மன்னார் மருதமடு புனர்வாழ்வு முகாமில் உள்ள புலிச் சந்தேகநபர்கள் தமது சர்வ தேச வலையமைப்பினருக்கு தகவல் வழங் கியுள்ளதாக இராணுவப் பேச்சாளர் மேஜர் ஜெனரல் உபாய மெதவல தெரிவித்தார்.
மன்னார் மருதமடு புனர்வாழ்வு முகா மில் புனர்வாழ்வளிக்கப்பட்டு வரும் விடுத லைப் புலிகளின் உறுப்பினர்கள் தம்மிடம் இரகசியமான முறையில் மறைத்து வைத் திருந்த 17 கையடக்க தொலைபேசிகள் உட்பட பல உபகரணங்கள் மீட்கப்பட்டுள்ளன. இதுகுறித்து கருத்து வெளியிடுகையிலேயே அவர் இதனைக் கூறினார்.
சில கையடக்கத் தொலைபேசிகளை அவர்கள் தமக்கு தேவையான நேரத்தில் பயன்படுத்திய பின்னர் புதைத்துவைத்திருந்த தாகவும் அவர் கூறியுள்ளார்.அவர் மேலும் கூறியதாவது இந்த சம்ப வத்துடன் தொடர்புடைய புலிகளின் சந்தேக நபர்கள் வெளி நாடுகளுக்கு அழைப்புகளை மேற் கொண்டுள்ளனர். இவர்கள் தமது சர்வதேச வலையமைப்பினருக்கு தகவல்களை வழங்கியிருக்கலாம் எனவும் பாதுகாப்புப் படையினர் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
தொலைபேசிகளில் எடுக்கப் பட்ட அழைப்புக்கள் தொடர்பாக விசா ரணைகள் நடத்தப்பட்டு வருகின் றன. கையடக்கத் தொலைபேசிகளு டன் 14 சிம் அட்டைகள் முப்பது பற்றரிகள் மற்றும் 21 சார்ஜர்கள் என் பன கைப்பற்றப்பட்டுள்ளன.புனர்வாழ்வு முகாமில் அதிகாரிகள் மேற்கொண்ட தேடுதலில் இவை கைப்பற்றப்பட்டுள்ளன.அதே வேளை இது குறித்து இராணுவப் புலனாய்வுப் பிரிவினர் துரிதமான விசாரணையை ஆரம்பித்துள்ளதாகவும் இராணுவப் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை புனர்வாழ்வு முகாம் களில் உள்ள புலிகளின் சந்தேக நபர்கள் கையடக்கத் தொலைபேசி களை வைத்திருப்பது தடைசெய்யப் பட்டுள்ளதாக புனர்வாழ்வு ஆணை யாளர் பிரிகேடியர் சுதந்த ரணசிங்க தெரிவித்துள்ளார்.எனினும் ஒரு தொலைபேசியில் உள்வரும் அழைப்புக்களுடன் தொடர்பு கொள்வதற்கு மாத்திரம் கண்காணிப்புடன் அவர்களுக்கு சந்தர்ப்பம் வழங்கப்பட்டுவருகிறது.
அதேவேளை தொழில்களில் ஈடுபடுத்தப்பட்டுள்ள புனர்வாழ்வ ளிக்கப்பட்டவர்களுக்கு கையடக் கத் தொலைபேசிகளை பயன்படுத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது என வும் ரணசிங்க கூறியுள்ளார்.
மருதமடு முகாமில் கையடக்கத் தொலைபேசிகள் கைப்பற்றப்பட் டுள்ளமை தொடர்பாக விசாரணைகள் நடைபெற்று வருவதாகவும் இந்த முகாமில் புலிகளின் முன்னாள் உறுப்பினர்கள் 500 பேருக்கு புனர்வாழ்வு பயிற்சிகள் வழங்கப்பட்டு வருவதாகவும் சுதந்த ரணசிங்க மேலும் கூறியுள்ளார்.
காப்புரிமையாவும் வலம்புரி அன்கோ பத்திரிகை நிறுவனத்திற்குரியது
Any part of the news in this site will not be allowed to republish
without permission of Editor
Valampurii.com All Rights reserved 1999-2010
இத்தளம் 1024x768 என்ற திரை அளவில் சிறந்தமுறையில் பார்க்கப்படமுடியும்