ஆலய வழிபாட்டால் ஆனந்தம் காண வேண்டிய நாள், தொலைபேசி வழியில் கேட்கும் செய்திகளால் உற்சாகம் அடைவீர்கள், தொழிலில் முன்னேற்றமுண்டு.
இடபம்
கனவுகள் நனவாக கந்தனை வழிபட வேண்டிய நாள், பிள்ளைகள் வழியில் நல்ல செய்திகள் வந்து சேரும், பொருட் சேர்க்கைக்கு அஸ்திவாரமிடுவீர்கள் திரு மணப் பேச்சு நல்ல முடிவுக்கு வரும்.
மிதுனம்
பொருளாதார நிலையில் முன்னேற்ற மேற்படும்,யோசிக்காமல் செய்த காரியங்களில் கூட வெற்றி ஏற்பட்டு மகிழ்ச்சியைத் தரும், இறை வழிபாட் டில் நம்பிக்கை வைப்பீர்கள்.
கடகம்
காரிய வெற்றிக்கு கந்தனை வழிபட வேண்டிய நாள், உடன்பிறப்புகள் உங் கள் கருத்துக்களை ஏற்றுக் கொள்ள முன்வருவர், பொருட்கள் வாங்கி மகிழ்வீர்கள்.
சிங்கம்
வெளிவட்டார பழக்க வழக்கம் விரிவடை யும், புதிய ஒப்பந்தங்களில் கையய ழுத்திடும் வாய்ப்புண்டு, கையில் பணப்புழக்கம் அதிகரிக்கும், உஷ்ண சம்பந்தமான ரோக நிலை உண்டு.
கன்னி
உத்தியோகத்தில் வேலைப் பளு அதிகரி த்தாலும் மதிப்புக் கூடும், பணத்தேவை கள் கடைசி நேரத்தில் பூர்த்தியாகும், உடல் நலனில் அதிக அக்கறை காட்டு வீர்கள், தெய்வ சிந்தனை உண்டு.
துலாம்
பணப்புழக்கம் அதிகமானாலும் அடுத்தடுத்த செலவுகளால் திணறு வீர்கள், தொழில் நிமித்தம் பயண மொன்றை மேற்கொள்ளும் சூழ்நிலை அமையலாம், மனச்சஞ்சலமுண்டு.
விருச்சிகம்
வருமானம் திருப்தி தரும் நாள், வெளி நாட்டுத் தொடர்பு அனுகூலம் தரும், புதிய தொழில் தொடங்கும் திட்ட த்தை நிறைவேற்ற பெரியோரின் ஒத் துழைப்புக் கிட்டும், புகழடையும் நாள்.
தனுசு
கோவில் வழிபாட்டால் குதூகலம் காண வேண்டிய நாள், கடனுதவி கிடைக்கும் வாய்ப்புண்டு, குடும் பத்தில் ஒற்றுமை கூடும்,அந்நியரின் சந்திப்பு கிட்டும்.
மகரம்
உங்களின் நிர்வாகத் திறமைக்கு பாராட்டுக்கள் கிடைக்கும், கைவி ட்டுப் போன பொருளொன்று மீண் டும் கிடைக்கலாம், பிரயாணத்தின் மூலம் நன்மையடைவீர்கள்.
கும்பம்
கவலைகள் தீர கார்த்திகேயனை வழிபட வேண்டிய நாள், மருத்துவச் செலவுகள் கூடும், வேலைப் பளு அதிகரிக்கும், எதிர்பாராத மனஸ்தா பம் ஏற்படலாம்.
மீனம்
தெய்வீகச் சிந்தனை மேலோங்கும், உற வினர் வழியில் மனதிற்கினிய செய் திகள் வந்து சேரலாம், மாலையில் ஆடம் பரப் பொருட்கள் சேர்க்கை உண்டு, நண்பர்களின் சந்திப்புக் கிட்டும்.
இன்றைய நாள்
09.09.2010
(ஆவணி 24, வியாழக்கிழமை)
பிரதமை பிற்பகல் 2.17 மணிவரை
உத்தரம் பின்னிரவு 12.12 மணிவரை
இராகுகாலம் 1.34-3.04 மணிவரை
சுபநேரம் 7.34-9.04 மணிவரை
நல்லைக் கந்தன் பூங்காவனம்.
சங்கு
ஒலி
இன்று:
11
தொலைபேசி 0094 21 222 7829 மின்னஞ்சல்-
editor@valampurii.com
Registered as News paper in Srilanka
நெஸ்டமோல்ட் நிறுவனத்தின் அனுசரணையுடன் யாழ்மாவட்ட மெய்வல்லுநர் சங்கம் நேற்று நடத்திய மினி மரதன் ஓட்டப் போட்டியில் 5 ஆயிரத்துக்கு மேற்பட்ட வீர, வீராங்கனைகள் பங்கு பற்றினர்.
இதில் பாடசாலை மட்ட ஆண்கள் பிரிவில் ஊர்காவற்றுறை சென்.அன்ரனிஸ் கல்லூரி மாணவன் எம்.தினேஷிம் பெண்கள் பிரிவில் உரும்பிராய் சைவத்தமிழ் வித்தியாலய மாணவி எஸ்.மயூரியும் முதலிடத்தைப் பெற் றனர். அத்துடன் திறந்த மட்ட ஆண்கள் பிரிவில் கே.ஜெயந்தனும் பெண்கள் பிரிவில் என். மேசியும் முதலிடத்தைப்பிடித்தனர்.
நெஸ்டமோல்ட் நிறுவனத்தின் அனுசரணை யுடன் யாழ். மாவட்ட மெய்வல்லுனர் சங்கம் நடத்திய மினி மரதன் ஓட்டப் போட்டி நேற்று மாலை 3 மணிக்கு யாழ். துரையப்பா விளை யாட்டரங்கில் ஆரம்பமானது.இதில் பாடசாலை மட்டம், திறந்த மட்டம் என இரண்டு மட்டங்களில் ஆண்கள், பெண் கள் பிரிவுகளாக நடத்தப்பட்டது.
இதற்காக நேற்றுப் பிற்பகல் வரை 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பதிவு செய்திருந் தனர் .எனினும் பதிவு செய்தவர்களைவிட மேல திகமாக வந்தவர்களும் போட்டிகளில் கலந்து கொள்ள அனுமதிக்கப்பட்டனர். இந்நிலையில் ஆரம்பமான போட்டிகளில் 5 ஆயிரத்து 300 இற்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர் என ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.
பொலிஸார் இராணுவத்தினரின் வீதி ஒழுங்கு படுத்தல்களுடன் மிக நீண்ட வரிசையில் வீரர்கள் மினி மரதன் ஓட்டத்தில் கலந்து கொண்டனர். இதில் பாடசாலை மட்ட ஆண்கள் பிரிவில் ஊர்காவற்றுறை சென்.அன்ரனிஸ் கல்லூரி மாணவன் என்.தினேஷ் (வயது 19) 39 நிமி டங்கள் 4 விநாடிகளில் தூரத்தைக்கடந்து முதலிடத்தையும் மானிப்பாய் இந்துக்கல்லூரி மாணவன் ஏ.ஜீவன்ராஜ் (வயது 18) தூரத்தை 40 நிமிடங்கள் ஒரு விநாடிகளில் ஓடி முடித்து இரண்டாமிடத்தையும் வல்வெட்டித்துறை விக்கினேஸ்வரா வித்தியாலய மாணவன் பி.ஜசிகன் 40 நிமிடங்கள் 5 வி நாடிகளில் தூரத்தைக்கடந்து 3ஆம் இடத்தையும் பெற்றனர்.
பாடசாலை மட்ட பெண்கள் பிரிவில் உரும்பிராய் சைவத்தமிழ் வித்தியாலய மாணவி எஸ்.மயூரி (வயது 16) முதலாமிடத்தையும் அளவெட்டி அருணோதயாக்கல்லூரி மாணவி ரேவதி இரண்டாமிடத்தையும் பெற்றனர். திறந்த மட்ட ஆண்கள் பிரிவில் கே.ஜெயந்தன் முதலாமிடத்தையும் எஸ்.ஜெகதீஸ்வரன் இரண்டாமிடத்தையும் பெண்கள் பிரிவில் என்.மேசி முதலாமிடத்தையும் என்.சுமதி இரண்டாமிடத்தையும் எஸ்.அனுசியா மூன்றா மிடத்தையும் பிடித்தனர்.
நீண்டகாலத்திற்கு பின்னர் யாழ். மாவட் டத்தில் இடம்பெற்ற வடமாகாண மட்ட பெரும் மரதன் ஓட்டம் என்பதால் ஆயிரக்கணக்கான வீர,வீராங்கனைகள் ஆர்வத்துடன் கலந்து கொண்டதுடன் வீதிகளில் ரசிகர்கள் கூடி நின்று போட்டியாளர்களுக்கு உற்சாகம் அளித்தனர்.
காப்புரிமையாவும் வலம்புரி அன்கோ பத்திரிகை நிறுவனத்திற்குரியது
Any part of the news in this site will not be allowed to republish
without permission of Editor
Valampurii.com All Rights reserved 1999-2010
இத்தளம் 1024x768 என்ற திரை அளவில் சிறந்தமுறையில் பார்க்கப்படமுடியும்