தம்புள்ளையில் மழை நேற்றும் தாண்டவம் இறுதிப் போட்டி வாய்ப்பில் இலங்கைக்கு நெருக்கடி [செய்தி பதிவுசெய்யப்பட்டது : 2010-08-21 07:30:30| யாழ்ப்பாணம்]முத்தரப்பு ஒருநாள் தொடரில் நேற்று நடைபெற்ற இலங்கை-நியூசிலாந்து அணி களுக்கிடையிலான போட்டி மழை காரணமாக முடிபின்றி கைவிடப்பட்டது.
இந்தியா, இலங்கை, நியூசிலாந்து அணிகள் மோதும் முத்தரப்பு ஒருநாள் தொடர் தம் புள்ளையில் நடைபெற்று வருகிறது.
இத் தொடரில் ஒவ்வொரு அணியும் லீக் சுற்றில் இரு முறை மற்றைய அணியுடன் மோதும்.
இதில் ஒவ்வொரு அணியும் மற்றைய அணிகளுடன் ஒரு முறை மோதியதில் மூன்று அணிகளும் தலா ஒரு வெற்றியைப் பெற்றது.
இந் நிலையில் தொடரின் நான்காவது போட்டி நேற்று முன்தினம் நடைபெறவிருந்த போது மழைகாரணமாக ஒரு பந்து கூட வீசப் படாத நிலையில் கைவிடப்பட்ட ஆட்டம [மேலும் வாசிக்க...] சூழ்ச்சியில் சிக்கிய வீரேந்திர சேவாக்; இலங்கை அணியின் அநாகரிக ஆட்டம் - இந்தியப் பத்திரிகை குமுறல் [செய்தி பதிவுசெய்யப்பட்டது : 2010-08-19 07:57:54| யாழ்ப்பாணம்]இலங்கைக் கிரிக்கெட் அணியின் நாகரி கமான ஆட்டம் நாளுக்கு நாள் தேய்வடைந்து தடம்மாறி, திசை மாறி, சீரழிந்து வருகின்றது. இதனை இந்தியாவுக்கு எதிராகக் கடந்த திங் கட்கிழமை நடந்த போட்டியின் நிகழ்வு மீண் டும் உறுதி செய்துள்ளது. இவ்வாறு இந்தியப் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. இது தொடர்பில் அது மேலும் தெரிவிக்கப்பட்டுள் ளதாவது,
தம்புள்ளயில் நடைபெற்று வரும் முத்த ரப்பு ஒருநாள் கிரிக்கெட் தொடரில் கடந்த திங் கட்கிழமை நடைபெற்ற ஆட்டத்தில் இந்திய அணியை எதிர்த்து இலங்கை அணி களம் இறங்கியது.
நாணயச் சுழற்சியில் வென்று முதலில் துடுப்பாட்டம் செய்யும் அணியே வெற [மேலும் வாசிக்க...] ரான்டீவ் "நோபோல்' விவகாரம்; சதி செய்யத் தூண்டியவர் டில்சான்! - முழுப்பொறுப்பையும் நானே ஏற்கிறேன்-சங்கக்கார [செய்தி பதிவுசெய்யப்பட்டது : 2010-08-19 07:56:01| யாழ்ப்பாணம்]தம்புள்ளவில் நடைபெறும் முக்கோண ஒருநாள் கிரிக்கெட் தொடரில் கடந்த திங்கட் கிழமை இடம்பெற்ற ஆட்டத்தில் இந்தியக் கிரிக்கெட் வீரர் சேவாக்கின் சதம் பெறும் வாய்ப்பைத் தடுக்கும் வகையில் முறையற்ற பந்தை வீசினார் என்ற குற்றச்சாட்டின் பேரில் இலங்கை அணியின் வீரர் சுறாஜ் ரான்டீ வுக்கு ஒரு சர்வதேச ஒரு நாள் போட்டியில் விளையாடத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் கடைசியாக அவர் இந்திய அணியுடன் விளையாடிய போட்டிச் சம்பள மும் நீக்கப்பட்டுள்ளது.
ரான்டீவை முறையற்ற பந்தை வீசுவதற்கான ஆலோசனையை வழங்கியதாக திலக ரட்ணடில்சானுக்கும் இந்திய அணியுடனான போட்டிச் சம்பள [மேலும் வாசிக்க...] ஹைடர், அஜ்மல் அசத்தல் ஆட்டம் ; இன்னிங்ஸ் தோல்வியிலிருந்து பாகிஸ்தான் அணி தப்பியது [செய்தி பதிவுசெய்யப்பட்டது : 2010-08-09 06:37:47| யாழ்ப்பாணம்]ஹைடர், அஜ்மலின் சிறப்பான இணைப் பாட்டத்தின் மூலம் பாகிஸ்தான் அணி இன்னிங்ஸ் தோல்வியிலிருந்து மீண்டது.
இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் அணி 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரிலி விளையாடுகின்றது.
இதில் முதலாவது டெஸ்டில் வெற்றிபெற்ற இங்கிலாந்து அணி தொடரில் 1:0 என்ற கணக்கில் முன்னிலையிலுள்ள நிலையில் இரண்டாவது டெஸ்ட் கடந்த 6ஆம் திகதி பிறிமிங்காமில் ஆரம்பமானது.
இப் போட்டியில் நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்று முதலில் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி முதலாவது இன்னிங்ஸில் 72 ஓட்டங்களை எடுத்து சகல விக்கெட் டுக்களையுமிழந்தது.
தொடர [மேலும் வாசிக்க...] உதைபந்தாட்டப் போட்டி [செய்தி பதிவுசெய்யப்பட்டது : 2010-08-09 06:36:08| யாழ்ப்பாணம்]மாலுசந்தி மைக்கல் விளையாட்டுக்கழகத்தின் வருடாந்த விளையாட்டு விழாவில் யாழ். மாவட்ட அழைக்கப்பட்ட முன்னணிக் கழகங்கள் பங்கு பற்றும் 7 பேர் கொண்டமின் ஒளியினாலான உதைபந்தாட்ட சுற்றுப் போட்டி நாளை செவ்வாய்க்கிழமை பிற்பகல் 2.30 மணிக்கு கழக மைதானத்தில் ஆரம்ப மாகவுள்ளது.
முதலாவது போட்டியில் வடமராட்சியில் பலம் வாய்ந்த இரு அணிகளான சக்கோட்டை சென்சேவியர் விளையாட்டுக்கழகத்தை எதிர்த்து கரவெட்டி கலட்டி ஐக்கிய விளையாட் டுக்கழகமும், பிற்பகல் 4.00 மணிக்கு புத்தூர் கலைமதி விளையாட்டுக்கழகத்தை எதிர்த்து அல்வாய் மனோகரா அணி மோத வுள்ளதுடன் இச் சுற்றுப் போட்டியில் ய [மேலும் வாசிக்க...] முத்தரப்பு கிரிக்கெட் தொடர் நாளை தம்புள்ளயில் ஆரம்பம் ; இலங்கை அணியில் ஜெயசூர்யா நீக்கம் [செய்தி பதிவுசெய்யப்பட்டது : 2010-08-09 06:35:04| யாழ்ப்பாணம்]இலங்கை, இந்தியா, நியூசிலாந்து அணிகள் மோதும் முத்தரப்பு ஒருநாள் தொடர் நாளை தம்புள்ளயில் ஆரம்பமாகின்றது.
இத் தொடரில் இலங்கை அணியில் சனத் ஜெயசூர்யா நீக்கப்பட்டுள்ளார். இலங்கை, இந்தியா, நியூசிலாந்து அணி கள் மோதும் முத்தரப்பு ஒருநாள் தொடர் நாளை தம்புள்ள ரங்கிரிய மைதானத்தில் ஆரம்பமாகின்றது.
இதில் நாளை நடைபெறும் முதலாவது போட்டியில் இந்தியா-நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன.
இத் தொடரில் ஒவ்வொரு அணிகளும் மற்ற அணியுடன் தலா இரண்டு முறை மோத வேண்டும்.
புள்ளியடிப்படையில் முதலிரண்டு இடங்களைப்பிடிக்கும் அணிகள் இறுதிப் போட்டிக்கு தகுதி பெறும்.
இத் தொடரு [மேலும் வாசிக்க...] இலங்கை அணிதான் முதல்தர கிரிக்கெட் அணி ; அணித்தலைவர் சங்கா பெருமிதம் [செய்தி பதிவுசெய்யப்பட்டது : 2010-08-09 06:33:55| யாழ்ப்பாணம்]கொழும்பு டெஸ்டில் வெற்றிபெற்று இந்தியா தொடரை சமன் செய்தாலும் இலங்கை அணிதான் சிறப்பாக செயல்பட்டது என இலங்கை அணித்தலைவர் சங்கக்கார தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது,
டெஸ்ட் தொடரில் இந்தியாவை விட அதிக ஓட்டங்கள் மற்றும் அதிக விக்கெட்டுக்கள் வீழ்த்திய அணி இலங்கை தான். மூன்றாவது டெஸ்டின் கடைசி நாள் ஆட்டத்தில் சச்சின் மற்றும் ரெய்னா கொடுத்த பிடிவாய்ப்புக்களை தவற விட்டோம் இது பின்னடைவாக அமைந்தது விட்டது.
இரண்டாவது இன்னிங்ஸில் 300 ஓட்டங்கள் எடுத்திருந்தோம் என்றால் இந்தியாவுக்கு கடும் நெருக்கடி கொடுத்திருக்கலாம். லக்ஸ்மன் சிறப்பாக ஆ [மேலும் வாசிக்க...] லக்ஸ்மன் சதமடித்து அசத்தல் இந்தியா தொடரை சமன் செய்தது [செய்தி பதிவுசெய்யப்பட்டது : 2010-08-08 07:09:30| யாழ்ப்பாணம்]வி.வி.எஸ். லக்ஸ்மன் சதம் அடித்து அசத்த இந்திய அணி 3-வது டெஸ்டில் 5 விக்கெட்டுக்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுத் தொடரை 1:1 என்ற கணக்கில் சம நிலை செய்தது.
இலங்கைக்குச் சுற்றுப்பயணம் செய்த இந்திய அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியது. இதில் முதலாவது டெஸ்டில் வெற்றி பெற்ற இலங்கை அணி தொடரில் 1:0 என்ற கணக்கில் முன்னிலை பெற்ற நிலையில் 2-வது டெஸ்ட் வெற்றி தோல்வியின்றி முடிபடைந்தது.
இந் நிலையில் மூன்றாவதும் இறுதியுமான டெஸ்ட் போட்டி கடந்த மூன்றாம் திகதி பி.சரவணமுத்து மைதானத்தில் ஆரம்பமானது.
இப் போட்டியில் நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்று முதலில் [மேலும் வாசிக்க...] மெண்டிஸ் அற்புதம்; இலங்கை கெளரவம்; இரண்டாவது இன்னிங்ஸில் இந்தியா திணரல் : இன்றைய ஆட்டம் விறுவிறுப்பாக அமையும் [செய்தி பதிவுசெய்யப்பட்டது : 2010-08-07 07:43:35| யாழ்ப்பாணம்]சமரவீர, மெண்டிஸ் சிறப்பான இணைப்பாட்டத்தின் மூலம் சரிவிலிருந்து மீண்ட இலங்கை அணி இரண்டாவது இன்னிங்ஸில் 267 ஓட்டங்களை எடுத்து சகலவிக்கெட்டுக்களையுமிழந்தது.
இதன் மூலம் இரண்டாவது இன்னிங்ஸில் 257 ஓட்டங்களை எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன்துடுப்படுத்தாடி வரும் இந்திய அணி நேற்றைய நான்காம் நாள் ஆட்ட நேரமுடிபில் 3 விக்கெட்டுக்களையிழந்து 53 ஓட்டங்களை எடுத்தது.
இலங்கைக்கு சுற்றுப்பயணம் வந்துள்ள இந்திய அணி மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகின்றது.
இதில் முதலாவது டெஸ்ட்டில் வெற்றி பெற்ற இலங்கை அணி தொடரில் 1:0 என்ற கணக்கில் முன்னிலையிலுள்ள நில [மேலும் வாசிக்க...] சமரவீர சதம்; இலங்கை பலம் சேவாக் அதிரடியில் இந்தியா பதிலடி [செய்தி பதிவுசெய்யப்பட்டது : 2010-08-05 07:14:35| யாழ்ப்பாணம்]திலான் சமரவீர சதம் அடிக்க இலங்கை அணி முதலாவது இன்னிங்ஸில் சகல விக்கெட்டுக்களையுமிழந்து 425 ஓட்டங்களை எடுத்து வலுவான நிலையடைந்தது.
தொடர்ந்து முதலாவது இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடும் இந்திய அணி நேற்றைய இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிபில் 2 விக் கெட்டுக்களையிழந்து 180 ஓட்டங்களை எடுத்தது.
இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகின்றது.
இதில் முதலாவது டெஸ்டில் இலங்கை அணி வெற்றி பெற்றதுடன் இரண்டாவது போட்டி வெற்றிதோல்வின்றி முடிபடைந்தது.
இந்நிலையில் மூன்றாவதும் இறுதியுமான டெஸ்ட் நேற்று முன்தி [மேலும் வாசிக்க...] |