நல்லூரானின் தீர்த்தோற்சவத்தில் தமிழரின் உயர்பண்பை நிரூபிப்போம் [செய்தி பதிவுசெய்யப்பட்டது : 2010-09-07 05:54:11| யாழ்ப்பாணம்]நல்லூர் கந்தனுக்கு இன்று தேர்த் திருவிழா. தேரோடும் வீதியில் இலட்சோபலட்ச அடியார்கள் கூடுவர் என்பதை நேற்று நடந்த சப்பறத் திருவிழா உறுதி செய்துள்ளது.நல்லூர் மகோற்சவ காலத்தில் பொலிஸார் ஆற்றும் உன்னிப்பான கண்காணிப்பு நடவடிக் கைகளுக்காக அவர்களைப் பாராட்டலாம்.
அதேநேரம் நேற்று நடந்த சப்பறத் திருவிழாவில் இலட்சக் கணக்கான அடியார்கள் கலந்து கொண்டதனால் நல்லூர் ஆலயத்திற்கு வருகின்ற வீதிகளில் மிகுந்த நெருக்கடி நிலை நிலவியதை அவதானிக்க முடிந்தது.குறிப்பாக அரசடி வீதியில் வீதியோரமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஓட்டோக்கள்,ஆல யத்திற்கு வருவோரும் செல்வோர [மேலும் வாசிக்க...] பசப்பு வார்த்தையாகிவிட்ட மீள்குடியேற்ற நடவடிக்கை [செய்தி பதிவுசெய்யப்பட்டது : 2010-09-06 07:34:37| யாழ்ப்பாணம்]யுத்தத்திற்குப் பின்பான மீள்குடியேற்றம் என்பது இன்னமும் முழுமை பெறாத விடயமாக இருப்பதைப் பார்க்கும்போது இலங்கை அரசு தமிழர்கள் மீது எத்துணை அக்கறை கொண்டுள் ளதென்பதை உணரமுடியும்.
வன்னிப் பெரும் போர் நடைபெற்று முடிபுற்ற வேளை சுமார் 3 இலட்சம் தமிழ் மக்கள் முட்கம்பி வேலிக்குள் அடைக்கப்பட்டிருந்தனர்.அவர்களை விடுவிப்பதில் அரசு காட்டிய அச மந்தம் மறப்பதற்குரியதல்ல.உலக நாடுகள், ஐக்கிய நாடுகள் சபை எனப் பலரும் கோரிக்கை விட்டும் அரசு அசைந்த பா டில்லை. மாறாக ஜனாதிபதித் தேர்தல் அறிவிப்பு விடப்பட்டதன் காரணமாக முகாம்களில் அடைக்கப்பட்ட மக்களை விடுவிப்பதற [மேலும் வாசிக்க...] தென்பகுதி மக்களின் வருகை துன்பம் தரக் கூடாது [செய்தி பதிவுசெய்யப்பட்டது : 2010-09-05 07:37:04| யாழ்ப்பாணம்]யாழ்ப்பாணத்தை நோக்கி தென் பகுதியிலிருந்து வருகை தருகின்ற மக்கள் எதைத்தான் பார்க்கின்றார்கள்?இங்கு என்னதான் இருக்கிறது அவர்கள் பார்ப்பதற்கு? என்ற கேள்வி எம்மில் பலரிடம் ஏற்படுகின்றது.
இந்தக் கேள்விதான் எங்கள் பெருமைகளையும் வரலாற்றுச் சின்னங்களையும் சிதைப்பதற்கு மூல காரணம் என்பது உணரப்பட வேண்டும்.எங்கள் மூதாதையர் பயன்படுத்திய வெற்றிலைத்தட்டம் கூட எங்கள் வாழ்வியல் பண்பாட்டின் அடையாளம் என்பது தெரியாமல் இருப்பதனால்தான்,ஒரு கிலோ செப்பு நாற்பது ரூபாய், பித்தளை முப்பது ரூபாய் என்று தராசில் நிறுத்து விற்றுத் தீர்க்கின்றோம்.
மிகப் பெறுமதி [மேலும் வாசிக்க...] இந்துக் கடவுளர் தம்நிலை உணர்வரோ [செய்தி பதிவுசெய்யப்பட்டது : 2010-09-04 06:54:16| யாழ்ப்பாணம்]இலங்கையில் கெளதம புத்தபிரானுக்கு முன்னுரிமை, முதலிடம். அவர் நினைத்தால் எங்கும் குடியேறலாம்.அந்தளவிற்கு கெளதம புத்தபிரானின் சக்தி பலம் மிக்கதாகவுள்ளது.
புத்தபிரானின் சக்தியை வெல்லும் சக்தி உமைக்கும் கிடையாது. உமையைத் தன் பாகத் தில் வைத்திருக்கும் சிவனுக்கும் கிடையாது.
நல்லூர்க் கந்தன் உதவுவான் என்று நம்பி னோம். அவனும் தென் பகுதி அப்பிளுக்கும் ஆரஞ் சுக்கும் ஆசைப்பட்டு விட்டான் போலும்.
மாம்பழத்திற்காக மலையேறியவனுக்கு அப்பிள், ஆரஞ்சு நன்றாகப் பிடித்திருக்கும். அதனால் அவன் வீதியயங்கும் புத்தபிரானின் புதல்வர்கள் ஆக்கிரமித்து விட்டனர்.
தம [மேலும் வாசிக்க...] கொத்துறொட்டிக் கடையை விட்டால் வேறு எதுவுமில்லையோ! [செய்தி பதிவுசெய்யப்பட்டது : 2010-09-03 08:06:59| யாழ்ப்பாணம்]உணவுச்சாலைகள், சில்லறை வர்த்தகங் கள், மதுபானச்சாலைகள், தெருவோர வியாபா ரங்கள் இவை யாழ்ப்பாணத்தின் தற்போதைய பொருளாதாரப் பங்களிப்பில் முதன்மை பெற் றுள்ளன.
ஒரு குறுகிய வட்டத்திற்குள் நின்று ஒருவர் செய்யும் தொழில் முயற்சியையே எல்லோரும் செய்கின்ற தன்மையை பார்க்கும்போது எங் கள் முயற்சியில் விரிவுத்தன்மை இல்லாதிருப் பதை காணமுடிகின்றது.
கண்டி தலதா மாளிகைக்கு அண்மையிலுள்ள வாவியைச் சுற்றிப் பார்ப்பதற்கென இயந்திரப் படகுகள், அதற்கென ஒரு தொகை கட்டணம் என்றவாறு வித்தியாசமான முயற்சி நடக்கின்றன.
ஹபரண, தம்புள்ள ஆகிய இடங்களில் உள்ள உல்லாசப் பயணிகள் விடுதி [மேலும் வாசிக்க...] திருப்புமுனையாய் அமைந்த நிருபமா ராவின் யாழ் வருகை [செய்தி பதிவுசெய்யப்பட்டது : 2010-09-02 07:30:29| யாழ்ப்பாணம்]இந்திய வெளியுறவுச் செயலாளர் நிருபமா ராவ் நேற்று முன்தினம் யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்திருந்தார்.யாழ்ப்பாணத்திற்கு வருகைதந்த அவருக்கு யாழ்.பொது நூலகத்தில் பொது வரவேற்பு அளிக் கப்பட்டதுடன், கேட்போர் கூடத்தில் சமயத் தலைவர்கள், பொது அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் கல்வியாளர்கள் உள்ளிட்டோர் அடங்கிய சந்திப்பொன்றும் நடைபெற்றது.
இச்சந்திப்பில் சபையோர் கருத்து இடம் பெற்ற வேளை வரலாற்றுத்துறை தகைசார் பேராசிரியர் சி.க.சிற்றம்பலம் அவர்கள், “இலங் கைத் தமிழர்கள் இந்தியாவை நம்பியிருந் தார்கள். ஆனால் இந்தியா எங்களை கைவிட்டு விட்டது.இந்தியா நினைத்த [மேலும் வாசிக்க...] நல்லூர் முருகன் அழைத்தான் நாவலன் விரைந்தான் [செய்தி பதிவுசெய்யப்பட்டது : 2010-09-01 07:53:15| யாழ்ப்பாணம்]நல்லைநகர் ஆறுமுகநாவலரின் சிலை நேற்றைய தினம் நல்லூர் மணிமண்டபத்தில் மீளவும் பிர திஷ்டை செய்யப்பட்டது.
இந்த நிகழ்வு நிறைவடைந்து நாவலர் மணி மண்டபத்தை விட்டு வெளியேறிய போது ஓர் அன்பர் எம்மை இடைமறித்தார்.
தற்போது சுவிட்சர்லாந்தில் இருக்கும் ஊடக வியலாளர் என்று தம்மை அறிமுகப்படுத்திக் கொண்ட அவர் “எனக்கு ஒரு சந்தேகம்” என்றார்.“என்ன சந்தேகம்” என்றோம்.
ஆறுமுக நாவலரின் சிலையை ஏன் இங்கிருந்து நாவலர் மண்டபத்துக்கு எடுத்துச் சென்றார்கள்? இப்போது ஏன் அவரைக் கொண்டு வந்து வைக்கிறார்கள்? இதுதான் அவரின் சந்தேகம்.
முருகனைக் காட்டி எல்லாம் அவரின் வே(ல்)லை. இன [மேலும் வாசிக்க...] ஜே.ஆர் .செய்தது பிழை அதைத் திருத்தியது பெரும் பிழை [செய்தி பதிவுசெய்யப்பட்டது : 2010-08-31 09:23:45| யாழ்ப்பாணம்]நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி ஆட்சிமுறையின் விஸ்வப் பிரம்மா ஜே.ஆர்.ஜய வர்த்தன என்பது தெரிந்த உண்மை.இரண்டு தடவைகள் நிறைவேற்று அதிகாரமுடைய ஜனா திபதியாக பதவி வகித்த ஜே.ஆர்.ஜயவர்த்தன மூன்றாவது தடவையாகவும் ஜனாதிபதியாக இருக்க விரும்பியிருந்தாலும்,அப்போது பிரத மராக இருந்த ஆர்.பிரேமதாச அதற்கு இடங் கொடுக்கவில்லை.
இதனால் ஜே.ஆர்.ஜயவர்த்தன கவலை யோடு வீடு சென்றார்.தன்னால் சிருஷ்டிக்கப்பட்ட நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி ஆட்சிமுறை பொருத்தமானதல்ல என்பதை அவர் பின்னாளில் உணர்ந்து கொண்டதாக அவருடன் நெருக்கமானவர்கள் கூறியதுண்டு.
நிறைவேற்று ஜனா [மேலும் வாசிக்க...] வெறுப்பு நிலையில் தமிழ் மக்கள் உள்ளனர் [செய்தி பதிவுசெய்யப்பட்டது : 2010-08-30 07:36:54| யாழ்ப்பாணம்]யுத்தத்தின் வெற்றி மூலம் நாட்டை இணைத் தாலும் மக்களை இணைக்க முடியவில்லை என அமைச்சர் டியூ.குணசேகர தெரிவித்த கருத் துக்கள் ஆழமானவை.விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டிலிருந்த பிரதேசங்களை யுத்த வெற்றி மூலம் பெற்றுக் கொள்ள முடிந்தது.
ஆனால் சிங்கள,தமிழ் இனங்கள் ஒற்று மைப்படவில்லை.அவர்களிடையே இன்னமும் வேற்றுமை அதிகரித்துள்ளது என்பதே அமைச்சர் டியூ.குணசேகரவின் கருத்து.
அப்படியானால் மக்களை இணைக்க வேண் டும்.ஒற்றுமைப்படுத்த வேண்டும் என்பது அமைச் சரின் முடிபாக இருக்கும்.
ஆளும் கட்சியின் அமைச்சர் ஒருவர் ஓர் உண்மையை வெளிப்படையாகக் கூறியமை வர வேற்கப்பட வ [மேலும் வாசிக்க...] ரணிலை முந்திய ஹக்கீம் நம்ப நட; நம்பி நடவாதே [செய்தி பதிவுசெய்யப்பட்டது : 2010-08-29 08:47:01| யாழ்ப்பாணம்]அரசியலமைப்பு சீர்திருத்தம் தொடர்பில் பொது உடன்பாடு ஒன்றை எட்டுவதற்காக ஜனா திபதி மகிந்த ராஜபக்வும் எதிர்க்கட்சித் தலை வர் ரணில் விக்கிரமசிங்கவும் சில தடவைகள் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினர்.
பேச்சுவார்த்தையில் நிறைவேற்று ஜனாதி பதி ஆட்சிமுறைக்கு முடிபுகட்டி நாடாளுமன்றுக் குப் பொறுப்புக் கூறும் வகையில் நிறைவேற்று அதிகாரம் கொண்ட பிரதமர் ஆட்சிமுறையைக் கொண்டுவரும் நடவடிக்கைபற்றி இருவரும் ஆராய்ந்தனர்.
நிறைவேற்று ஜனாதிபதி ஆட்சிமுறையை இல்லாதொழிக்க வேண்டும் என்பதில் ரணில் விக்கிரமசிங்க உறுதியாக உள்ளார்.
ரணிலின் மனநிலையை உணர்ந்து [மேலும் வாசிக்க...] |