நல்லூரானுக்கு இன்று தேர் [செய்தி பதிவுசெய்யப்பட்டது : 2010-09-07 06:09:48| யாழ்ப்பாணம்] வரலாற்றுச் சிறப்பு மிக்க நல்லூர்க் கந்தனின் தேர்த் திருவிழா இன்று இடம்பெறுகின்றது. காலை 7 மணிக்கு முருகப் பெருமான் தேரில் உலா வருவார். இன்றைய தேர்த்திரு விழாவில் இலட்சக் கணக்கானோர் பங்கேற்பர் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இம்முறை நாட்டின் பல பாகங்களிலிருந்தும் வெளிநாடுகளிலிருந்தும் பெருமளவானோர் பங்கேற்பர்.
இதேவேளை பெருமளவான பக் [மேலும் வாசிக்க...] அரசியல் சட்ட திருத்தத்திற்கு தமிழ்க் கூட்டமைப்பு எதிர்ப்பு - நேற்றைய கூட்டத்தில் தீர்மானம் [செய்தி பதிவுசெய்யப்பட்டது : 2010-09-07 06:03:46| யாழ்ப்பாணம்]நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனா திபதி பதவியை வலுப்படுத்திக் கொள்ளும் நோக்கில் இலங்கை அரசு நாளை நாடாளு மன்றத்தில் கொண்டு வரவுள்ள 18 ஆவது அர சியல் சட்டத்திருத்த மசோதாவை எதிர்த்து வாக்களிப்பது என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தீர்மானித்துள்ளது.
நேற்றுத் திங்கட்கிழமையன்று இக் கூட்ட மைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் நடத்திய கூட்டத்தில் இந்த முடிபு ஏகமனதாக எடுக்கப்பட்டதாக நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் தெரிவித்தார்.
இந்தச் சட்டமூல [மேலும் வாசிக்க...] அரச அதிபர்களுக்கான மாநாடு நேற்று யாழ்ப்பாணத்தில் ஆரம்பம் [செய்தி பதிவுசெய்யப்பட்டது : 2010-09-07 06:02:05| யாழ்ப்பாணம்]பொதுநிர்வாக உள்நாட்டலுவல்கள் அமைச்சின் ஏற்பாட்டில் அரச அதிபர்களுக் கான மாதாந்த மாநாடு நேற்று யாழ்.மாவட்ட அரச அதிபர் செயலகத்தில் ஆரம்பமானது. பொதுநிர்வாக உள்நாட்டலுவல்கள் அமைச்சர் ஜோன் செனவிரட்ண தலைமையில் ஆரம்பமான இம் மாநாடு இன்று 2- வது நாளாகவும் நடைபெறும்.
பொது நிர்வாக உள்நாட்டலுவல்கள் அமைச்சினால் மாதாந்தம் நடத்தப்படும் 25 மாவட்டங்களின் அரச அதிபர்களுக்குமான மாநாடு இம்முறை யாழ்ப்பாணத்தில் நடத்தப்படுகின்றது.
இம் மாநாடு நேற்றுக் கா [மேலும் வாசிக்க...] யாழ்ப்பாணத்துக்குப் போக வேண்டாம் லண்டன் குடும்பத்தின் திகில் அனுபவம்! [செய்தி பதிவுசெய்யப்பட்டது : 2010-09-07 05:59:30| யாழ்ப்பாணம்]லண்டனில் வசிக்கும் தமிழ் குடும்பத்தினர் அண்மையில் யாழ்ப் பாணம் வந்து விட்டு சில நாட்க ளுக்கு முன்னர் லண்டன் திரும் பியுள்ள நிலையில் யாழ்ப்பாணத் தில் தமது சொந்த ஊரில் தங்கியி ருந்த மிக குறுகிய காலத்தில் அவர்களுக்கு ஏற்பட்ட திகிலான அனுப வங்கள் குறித்து விபரித்துள்ளனர்.
இவர்கள் தமது சொந்த ஊரான கொக்குவிலில் உள்ள தமது வீட்டில் தங்கியிருந்தபோது 10க்கும் மேற் பட்ட இளைஞர்கள் முகமூடி அணிந்த நிலையில் மோட்டார் சைக்கிளில் வந்து தம்மை அச்சுறுத் [மேலும் வாசிக்க...] இந்திய இராணுவத் தளபதியுடன் பாதுகாப்புத் தரப்பினர் சந்திப்பு [செய்தி பதிவுசெய்யப்பட்டது : 2010-09-07 05:57:52| யாழ்ப்பாணம்]இந்திய இராணுவத் தளபதி வி.கே.சிங் 5 நாள் பயணமாக நேற்று முன்தினம் இலங் கைக்கு வந்தார். தனது மனைவியுடன் வந்த இந்திய இராணுவத் தளபதியை கொழும்பு விமான நிலையத்தில் இலங்கை இராணுவத் தளபதி ஜகத் ஜெயசூர்யா வரவேற்றார்.
இந்தியா- இலங்கை இடையிலான இரா ணுவ ஒத்துழைப்பை அதிகரிப்பது தொடர் பான பேச்சுவார்த்தைகளைத் தொடங்க அவர் கொழும்பு சென்றுள்ளார்.வி.கே.சிங்குக்கு நேற்று இராணுவ அணி வகுப்பு மரியாதை அளிக்கப்பட்டது. அதன் பின் னர் முற்பகல் இராணுவத் தளபதி ஜகத் ஜெ [மேலும் வாசிக்க...] நல்லூர்க் கந்தனின் ஆலயச் சூழலில் பொலிஸ் புலனாய்வுத் துறை குவிப்பு - திருடர்களைப் பிடிப்பதற்கு! [செய்தி பதிவுசெய்யப்பட்டது : 2010-09-07 05:47:01| யாழ்ப்பாணம்]நல்லூர்க் கந்தனின் தேர்த் திருவிழா வான இன்று அதிகளவில் திருட்டு இடம்பெறக் கூடும் என்ற அச்சம் காரணமாக அதிகள வான பொலிஸ் புலனாய்வுத்துறையினர் நிறுத்தப்பட்டுள்ளனர்.
நேற்றுச் சப்பறத் திருவிழாவின்போது இந்து பக்தர்கள் போன்று உடையணிந்த சர ளமாகத் தமிழ் பேசக் கூடிய பொலிஸ் புல னாய்வுத் துறையினரும் பொலிஸாரும் கடமையில் ஈடுபட்டிருந்தனர்.
அதேபோன்று இன்றும் நாளையும் அவர்கள் கடமையில் ஈடுபட்டிருப்பார்கள் எனத் தெரிவிக்கப்பட்டது.நல்லூர்க் கந்தன [மேலும் வாசிக்க...] ஆசிரிய இடமாற்றம் இடைநிறுத்தம் முன்னைய பாடசாலையில் கடமையாற்ற இடமாற்றம் பெற்றவர்களுக்குப் பணிப்பு [செய்தி பதிவுசெய்யப்பட்டது : 2010-09-07 05:44:30| யாழ்ப்பாணம்]வடக்கு மாகாண மாவட்டங்களுக்கிடை யில் வழங்கப்பட்ட ஆசிரிய இடமாற்றம் யாவும் இடைநிறுத்தப்பட்டமையினால் ஆளு நரின் பதில் கட்டளை கிடைக்கும் வரையில் மாற்றம் வழங்கப்பட்ட ஆசிரியர்கள் தமது முன்னைய பாடசாலைகளிலேயே மூன்றாம் தவணை ஆரம்பத்திலிருந்து கடமையாற்று மாறு அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனை வடக்கு மாகாணக் கல்வித் திணைக்களம் நேற்று வெளியிட்டது. இது தொடர்பில் வடக்கு மாகாணக் கல்வித் திணைக்களத்தினால் நேற்று விடுக்கப்பட்ட செய்தியில் தெரிவிக் கப்ப [மேலும் வாசிக்க...] திருமலையில் மாணவன் கடத்தல் [செய்தி பதிவுசெய்யப்பட்டது : 2010-09-07 05:42:20| யாழ்ப்பாணம்]திருகோணமலை மாவட்டத்தில் உள்ள பிரபல தமிழ்ப் பாடசாலை ஒன்றில் கல்வி கற் கும் 19 வயது மாணவன் ஒருவர் தனியார் வகுப்பு ஒன்றை முடித்துக் கொண்டு சைக்கி ளில் வீடு திரும்பிக் கொண்டிருந்தபோது நேற்று மாலை வான் ஒன்றில் கடத்தப்பட்டி ருக்கின்றார்.
ஞானரத்தினம் சர்மிலன் என்பவரே இவ் வாறு கடத்தப்பட்டிருப்பவர் ஆவார். இவர் கடத்தப்பட்டிருக்கின்றார் என்று தெரிவித்து இவரின் மாமனார்திருகோணமலைப் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.பொலிஸார் கடத்தல் [மேலும் வாசிக்க...] |