வெளிவிவகார அமைச்சர் பீரிஸுக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம் [செய்தி பதிவுசெய்யப்பட்டது : 2010-09-04 07:52:38| யாழ்ப்பாணம்]வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரி ஸுக்கு எதிராக ஐக்கிய தேசியக் கட்சி நம்பிக் கையில்லாத் தீர்மானம் ஒன்றை நிறைவேற் றத் தீர்மானித்துள்ளது. குறித்த நம்பிக்கையில்லாப் பிரேரணை யோசனைத் திட்டம் சபாநாயகர் சமல் ராஜபக் விடம் ஏற்கனவே ஒப்படைக்கப்பட்டுள்ளது. வெளிவிவகார அமைச்சர் சர்வதேச விவகா ரங்களை உரிய முறையில் கையாளத் தவறி யுள்ளதாகக் குற்றஞ்சுமத்தப்பட்டுள்ளது.
நம்பிக்கையில்லாத் தீர்மானத்தில் ஐக் கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக் கிரமச [மேலும் வாசிக்க...] இராசபாதையில் விபத்து இளைஞன் உயிரிழப்பு [செய்தி பதிவுசெய்யப்பட்டது : 2010-09-04 07:29:46| யாழ்ப்பாணம்]கோப்பாய் இராசபாதையில் நேற்றுப் பிற் பகல் 2.15 மணியளவில் உழவு இயந்திர மும் மோட்டார் சைக்கிளிலும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் இளைஞர் ஒருவர் உயிரிழந்தார். மற்றுமொருவர் படுகாய மடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இவ் விபத்தில் அனலைதீவைச் சேர்ந்த குமரேஸ் நிர்மலன் (வயது-25) என்ற இளை ஞனே உயிரிழந்தவர் ஆவார்.
சம்பவம் தொடர்பில் தெரிய வருவதாவது, நீர்வேலிப் பகுதியிலிருந்து கற்களை ஏற்றிக் கொண்டு யாழ்.நோக் [மேலும் வாசிக்க...] நடைமுறைச் சாத்தியமானதையே தமிழ் மக்கள் கோரி நிற்கின்றனர் - அமைச்சர் டக்ளஸ் சாட்சியம் [செய்தி பதிவுசெய்யப்பட்டது : 2010-09-04 07:19:23| யாழ்ப்பாணம்]தமிழ் மக்கள் சூரியனையோ, சந்திரனை யோ கேட்கவில்லை. நடைமுறைச் சாத்திய மான விடயங்களையே கோருகின்றனர் என்று படிப்பினைகள் மற்றும் நல்லிணக்கத் துக்கான ஆணைக்குழுவின் முன்பாக சாட்சி யமளித்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கூறியுள்ளார்.
நேற்றுப் பல மணி நேரம் ஆணைக்குழு வின் முன்னதாகச் சாட்சியமளித்த அவர், இலங்கையர் என்பதற்காகத் தமிழர் என்ப தையோ அல்லது தமிழர் என்பதற்காக இலங்கையர் என்பதையோ விட்டுக்கொடுக்கத் தாம் தயாராகவில்லை என்றும் ஆணைக் குழுவி டம் [மேலும் வாசிக்க...] புகலிடம் நிராகரிக்கப்படும் இலங்கையருக்குப் பேராபத்து - மன்னிப்புச் சபை அறிக்கை [செய்தி பதிவுசெய்யப்பட்டது : 2010-09-04 07:08:05| யாழ்ப்பாணம்]அகதி அந்தஸ்து நிராகரிக்கப்பட்டு நாட் டுக்குத் திருப்பி அனுப்பப்படும் இலங்கையர் கள் அங்கு அரசு தரப்பினரால் சித்திரவதை செய்யப்படுகின்றார்கள் என்று சர்வதேச மன்னிப்புச் சபை வெளிப்படுத்தியுள்ளது.
அவுஸ்திரேலியாவில் இருந்து பலாத்கா ரமாகக் கடந்த வருடம் இவ்வாறு அனுப்பி வைக்கப்பட்டிருந்த மூவர் சிறையில் அடைக் கப்பட்டு இருக்கின்றார்கள் என்றும் சித்திரவ தை செய்யப்பட்டு இருக்கின்றார்கள் என்றும் சபை நேற்று வெளியிட்ட அறிக்கை ஒன்றில் தெரிவி [மேலும் வாசிக்க...] அரசியல் அமைப்புத் திருத்தத்துக்கு எதிராகச் செயற்படத் தீர்மானம்! - ஜே.வி.பி. அறிவிப்பு [செய்தி பதிவுசெய்யப்பட்டது : 2010-09-04 06:57:26| யாழ்ப்பாணம்]அரசாங்கத்தின் புதிய அரசியல் அமைப்புத் திருத்தங்களுக்கு எதிராக நிபந்தனை யின்றி செயற்படப் போவதாக ஜே.வி.பியின் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா தெரிவித்துள்ளார்.
அரசாங்கத்தின் இந்தத் தார்மீக விரோத அரசியல் அமைப்புத் திருத்தத்திற்கு எதிராக நீதிமன்றத்திற்குச் சென்ற ஒரே அரசியல் கட்சி ஜே.வி.பி. மாத்திரமே எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.அரசியல் அமைப்புத் திருத்தத்தை நிறை வேற்றிக் கொள்வதற்காக மூன்றில் இரண்டு பெரும்பான்மைபப் பலத்தைப் பெறக் [மேலும் வாசிக்க...] ஜனாதிபதி மகிந்த ராஜபக் பயன்படுத்தும் வாகனங்களின் பெறுமதி ரூபாய் 241 கோடி [செய்தி பதிவுசெய்யப்பட்டது : 2010-09-04 06:49:49| யாழ்ப்பாணம்]ஜனாதிபதி மகிந்தவின் வாகனங்களின் பெறுமதி 241 கோடி ரூபாய் எனவும் அதனைக் கட்டுப்படுத்தியிருந்தால் வன்னி மக்களுக்கான மீள் குடியேற்றத்தை விரைவாக மேற் கொள்ள முடியும் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இலங்கை சனநாயக குடியரசின் மேதகு ஜனாதிபதியாக 2006-ம் ஆண்டு மகிந்த தேர்ந்தெடுக்கப்பட்டபோது ஜனாதிபதி யின் பாவனைக்காக இருந்த வாகனங்களின் பெறுமதி மூன்று கோடியே ஒன்பது லட்சத்து பத்தாயிரம் ஆகும்.அது 2009-ம் ஆண்டு இறுதியில் இருநூற்றி நாற்பத்தொரு கோடியே மூ [மேலும் வாசிக்க...] அரசியல் அமைப்புத் திருத்தம் நாட்டை ஆபத்துக்குள் தள்ளும் - புத்திஜீவிகள் ஒன்றியம் எச்சரிக்கை [செய்தி பதிவுசெய்யப்பட்டது : 2010-09-04 06:45:20| யாழ்ப்பாணம்]உத்தேச 18ஆவது அரசியலமைப்புத் திருத்தமானது நாட்டின் ஜனநாயகத்தை பார தூரமான ஆபத்தில் தள்ளும் நடவடிக்கை எனவும் நாட்டை சர்வாதிகார நிர்வாகத்திற்குள் உட்படுத்தும் ஆபத்து இருப்பதாகவும் மனித உரிமைகள் தொடர்பான புத்திஜீவிகளின் ஒன்றியம் தெரிவித்துள்ளது.
உத்தேச அரசியலமைப்புத் திருத்தத்தின் மூலம் நாட்டில் ஜனநாயகத்தை வலுப்படுத்து வதற்காக 17ஆவது அரசியலமைப்பின் ஊடாக ஏற்படுத்தப்பட்ட அரசியலமைப்பு பேரவை இல்லாதொழிக்கப்பட உள்ளதுடன் அதன் அதிகாரங் [மேலும் வாசிக்க...] இலங்கை வருகிறார் இந்தியத் தளபதி [செய்தி பதிவுசெய்யப்பட்டது : 2010-09-04 06:41:03| யாழ்ப்பாணம்]இந்திய இராணுவத் தலைமைத் தளபதி வி.கே.சிங் ஐந்து நாள் பயணமாக நாளை இலங்கைக்குப் பயணம் மேற்கொள்கின்றார். இந்தப் பயணத்தின்போது பாதுகாப்புச் செய லர் கோத்தபாய ராஜபக், இராணுவத் தள பதி ஜெகத் ஜெயசூரிய மற்றும் முக்கிய அதி காரிகளை அவர் சந்திப்பார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
விடுதலைப்புலிகளுக்கு எதிரான தாக்கு தல் திட்டமான ஆப்ரேன் பவன் என்ற திட் டத்தை வகுத்துக் கொடுத்து அதற்காக யுத் சேனா பதக்கம் பெற்றவரே வி.கே. சிங் என் பது குறிப்பிடத்தக்கது.
வெ [மேலும் வாசிக்க...] |